இன்று மாலை மதுரை புறப்படும் தமிழக முதல்வர்.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய -மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடும் ஒத்திகை இரண்டு கட்டமாக நாடு முழுவதும் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.

இதனையடுத்து, புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் மருந்துகள் வந்து இறங்கியுள்ளது.

இந்நிலையில், நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு ஊசி போடும் மையத்திற்கு சென்று, இந்த தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மாலை அவர் மதுரை செல்கிறார் தமிழக முதல்வர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm go to madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->