#BigBreaking: தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி குடும்பத்துடன் தனது வாக்கினை செலுத்தினார்.!
TN CM EPS VOTING
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 234 தொகுதிகளில் 88,937 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையம் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்துவதற்காக வந்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை தற்போது செலுத்தி உள்ளார்.