முட்டி மோதும் சசிகலா டிடிவி.! பிடி கொடுக்காத எடப்பாடி ஒரே போடு.!
TN CM EPS SAY ABOUT TTV take over admk
சொத்து குவிப்பில் 4 ஆனது தணடனை முடிந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார். சசிகலா திரும்பி வந்ததும் திமுகவுக்கு கொண்டாட்டமாக இருந்தது. காரணம் அதிமுக உடையும் என்ற கணக்கு தான் அது. ஆனால் சசிகலா தமிழகத்தில் காலை வைத்த உடன் சொல்லிய வார்த்தை திமுகவை அழிப்பது தான் எங்கள் முக்கிய பணி என்றார். இதையே டிடிவி தினகரனும் கூறினார்.
ஆக., எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்குப்படி அதிமுக - அமமுக ஒன்று கூட்டணி வைக்கும். அல்லது இரு கட்சிகளும் ஒரே கட்சியாக (ஒரு மந்தையில் பிரிந்த இரு ஆடுகள் போல மீண்டும் ஒன்று சேரும்) அதிமுக மட்டும் போட்டியிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக முதலவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவிக்கையில், "அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். ஒருநாளும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது.
தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும். ஒரு குடும்பம் மட்டுமே ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் இடம் தராது. அடிப்படை தொண்டன்தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும். இது தொண்டன் ஆளுகின்ற கட்சி." என்று தமிழக முதல்வர் ஒரே போடாக போட்டுள்ளார்.
English Summary
TN CM EPS SAY ABOUT TTV take over admk