#BREAKING || வேதனையில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடி.! வெளியான இரங்கல் செய்தி.!
tn cm eps mourning to FireCrackers Accident death
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில் சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மன் பட்டாசு ஆலையில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்துள்ளனர். மேலும் இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் -போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழக முதல்வரின் அந்த இரங்கல் செய்தியில், "பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிர் இழந்த செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ர3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என்று தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழ்நாடு விருதுநகரில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்: தீ விபத்தால் உயிர் இழந்தவர்களின் அடுத்த உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்." என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பைடத்தக்கது.
English Summary
tn cm eps mourning to FireCrackers Accident death