#சற்றுமுன்: தமிழக முதல்வர் EPS உடன் OPS திடீர் ஆலோசனை! வெளியான தகவல்! தயாராகும் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருமான முதல்வர், எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.

மேலும் அதிமுக கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். பல மணி நேரம் நடைப்பெற்ற இக்கூட்டத்தை தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைபாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் இ.பி.எஸ் ஆகியோர் இணைத்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், ”அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில், கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

வரும் 28ம் தேதி நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm eps and ops meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->