#BigBreaking || நகைக்கடன்., மகளிர் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி.! தமிழக முதல்வர் சற்றுமுன் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கூட்டுறவு சங்கங்களில் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை ரத்து செய்தார். 

மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மேலும் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அதில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி (6 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி) செய்யப் படுவதாக அறிவித்துள்ளார். இரண்டாவதாக மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப் படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்று முன்பு அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Announcement feb 26


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->