போக்குவரத்து தொழிலார்களுக்கு ரூ.1000.! நாளை அனைத்து பேருந்துகளும் இயங்கும்.! தமிழக முதல்வர் அதிரடி.!
TN CM Announce
நாளை தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொழிலார் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
நாளை நடைபெற உள்ள வேலை திமுக அதன் கூட்டணி கட்சிகளின் போக்குவரத்து கழக தொழிலார்களின் வேலை நிறுத்தத்தை சமாளிப்பதற்காக தமிழக அரசு முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழக அரசுக்கு ஆதரவாக உள்ள அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதிய ஜனதா கட்சிகளின் தொழிற்சங்கங்களில் உள்ள ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில், தமிழக அரசு நாளைக்கு பணிக்கு வரவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே விடுமுறை எடுத்து இருந்தாலும் நாளை கண்டிப்பாக பணிக்கு திரும்பவேண்டும் என்றும், தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தவது, "தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் போக்குக்காரது தொழிலார்களுக்கு இடக்கால நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும். நாளை தமிழகத்தில் அனைத்து பேருந்துகளும் இயங்கும். மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.