முதல்வர் முக ஸ்டாலினுக்கும், திமுக அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த பாஜக.!!
tn bjp thanks to cm stalin and dmk minister
ஆயுத பூஜை முதல் ஆலயங்கள் திறந்ததை ஆத்மார்த்தமாக வரவேற்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் காலையில் வழிபட்டு வியாபாரத்தைத் தொடங்கும் வணிகப் பெருமக்களுக்கும், தினமும் வழிபடும் வழக்கமுடைய மூத்த குடிமக்களுக்கும், தினப்படி வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்களோடு இணைந்து வாரத்தின் எல்லா நாட்களிலும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக பெருவாரியான போராட்டங்களை நடத்தினர். சென்னை மண்ணடியில் தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோவில் நானும் போராட்டம் நடத்தி பேசுகையில் இன்னும் 1௦ நாட்களில் திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் கோவில்களை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தேன்.
திருவிழா நாட்களிலெல்லாம் திருக்கோயில்களின் மூடி இருக்காமல், மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோவில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசை பாராட்டி வரவேற்கிறோம்.
மக்களின் உண்மையான எண்ணங்களை பிரதிபலிக்கும், எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இந்த நவராத்திரி எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
English Summary
tn bjp thanks to cm stalin and dmk minister