தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்! இன்று நடந்தது என்ன தெரியுமா?! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு, போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பு கருதி முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் செல்வதற்கு தனித்தனியாக வாயில்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம் எல் ஏக்களும் முக கவசம் அணிந்து இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்று உள்ளனர்.

பேரவை கூட்டம் தொடங்கியதும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ அன்பழகன், எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவர்களுக்கும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை, சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn 3 day assembly meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->