உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி.. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.!!
tiruvallur district admk members join dmk
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - திருத்தணி ஊராட்சி அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் தங்கதனம் தலைமையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் - கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று மாலை, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருத்தணி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் தங்க தனம் தலைமையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய 6வது வார்டு கவுன்சிலர் செல்வி சந்தோஷ் - அ.தி.மு.க.வைச் சேர்ந்த செருக்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் வி.சின்னதம்பி, பி.ஆர்.பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பி.வளர்மதி, வி.கே.என்.கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர் பி.தேவி, ராஜா நகரம் ஊராட்சி மன்றத் தலைவர் லல்லி மகாலிங்கம், தே.மு.தி.க.வைச் சேர்ந்த நாராயணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மோனிஷா சரவணன், மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பட்டாபிராமபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.தேவி, தாடூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.கே.கிருஷ்ணமூர்த்தி, பீர்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.சி.சுப்பிரமணிராஜி - சுயேச்சைகளான கார்த்திகேயபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சந்திரா, டி.சி.கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசலு, வி.கே.ஆர்.புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.ரஜினி, பெரியகடம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ராதிகா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திருத்தணி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், திருத்தணி ஒன்றியச் செயலாளர்கள் ஆர்த்தி ரவி, கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
English Summary
tiruvallur district admk members join dmk