அவசர அறிவிப்பு.! அலெர்ட் ஆன திமுக நிர்வாகிகள்.! ஒன்றுகூடி முடிவெடுத்த தலைமை.! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வருகின்ற டிசம்பர் 20-ம் தேதி சென்னையில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திமுக-வில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள் கூட்டம், வரும், 20ம் தேதி நடக்க உள்ளது. தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ளது. தேர்தல் பணிகளில் திமுக உள்ளிட்ட கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில். சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை நடத்த மாவட்ட, மாநகர செயலர்கள்; ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள் கலந்துரையாடல் கூட்டம், திமுக தலைமைக் கழகமான, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள, கலைஞர் அரங்கத்தில், வரும், 20 -ம் தேதி காலை, 10 மணிக்கு நடைபெற உள்ளது.

கூட்டத்திற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தலைமை வகிக்க உள்ளார். இதில், அனைத்து நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் ." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thuraimurugan meeting announcement DEC 20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->