திமுகவின் மூத்த முன்னோடி, கலைஞரின் நண்பர் மறைந்தார்!
Thottiyam EX MLA vadivel passed away
திமுக முன்னாள் ஒருங்கினைந்த திருச்சி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பருமான, தொட்டியம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வடிவேல் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். (வயது 94).
மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். திமுகவில் பல்வேறு முக்கிய பொருப்புகளை வகித்துள்ளார். அவருடைய சொந்த ஊரான திருச்சி மாவட்டம் சீலைப்பிள்ளையார் புதூரில் உள்ள சொந்த வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவருடைய உறவினர் தெரிவித்துள்ளனர். மறைந்த வடிவேல் அவர்களின் பேரன் இரா சுகுமாரன் கரூர் தெற்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் ஆக உள்ளார்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் என்பது தற்போதைய அரியலூர், பெரம்பலுர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். ஐந்து மாவட்டங்களில் கட்சியை வளர்த்தவரும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, கலைஞரின் நண்பராகவும் இருந்துள்ளார். அவருடைய மறைவுக்கு திமுக சார்பில் இதுவரை இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை என்பது துயரமான விஷயமாகும்.
முரசொலி, சமூக வலைத்தளம் என எதிலுமே இரங்கல் அறிவிப்பு வெளியாகவில்லை. எல்லோரும் வேலூர் தேர்தல் பிசியில் கழகத்தின் முன்னோடி மறைந்ததையே மறைத்துவிட்டார்களோ?
English Summary
Thottiyam EX MLA vadivel passed away