மைக் கிடைத்த உற்சாகத்தில் மானாங்கண்ணி பேச்சு.. சூறையாடப்பட்ட திமுக பிரமுகர் வீடு.!
Thoothukudi DMK Umari Shanker House Attacked by Strangers 28 Dec 2020
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்காணி உமரிகாட்டை பகுதியை சார்ந்தவர் எம்.ஆர்.எஸ் உமரி சங்கர். இவர் திமுகவின் மாநில மாணவரணி துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக, அங்குள்ள ஆறுமுகநேரி பகுதியில் நடந்த திமுகவின் கிராமசபை கூட்டத்தில் பேசிய உமரி சங்கர், மாற்றுக் கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், யாருக்காவது தைரியம் என்று இருந்தால், தனது ஊருக்கு வந்து பார்க்குமாறு சவால் விடுத்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் உமாசங்கரின் வீட்டிற்கு வந்த 9 பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் அரிவாளுடன் வீட்டில் இருந்த காரை அடித்து உடைத்துள்ளது. காரின் அருகில் நின்று இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளது.
இதுமட்டுமல்லாது கார் முழுவதும் முட்டையை வீசி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பங்களா வீடு கட்டி இருந்தாலும், வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் யார் இக்குற்ற செயலில் ஈடுபட்டார்கள் என்ற குழப்பமானது இருந்து வருகிறது. ஏற்கனவே திமுகவில் கோஷ்டி பூசல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பதாகவும், இதில் உமாசங்கர் ஒரு தரப்புக்கு நெருக்கமாக இருப்பதால், உட்கட்சி விவகாரத்தில் தாக்குதல் நடந்ததா? அல்லது மேடையில் மைக் கிடைத்த நெகிழ்ச்சியில் வாயார எதிர்க்கட்சியினரை வசைபாடியதால் வந்த வம்பா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi DMK Umari Shanker House Attacked by Strangers 28 Dec 2020