#தஞ்சை கிருஸ்துவ பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது 

தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தன மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று, அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார்.

மேலும் அவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதனால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர்கள் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அவர்கள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு, 

பாலியல் தொல்லை புகார் இல்லை என்பதால், மாணவியின் உடலை மறு ஆய்வு செய்ய தேவை இல்லை. மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு அவரின் பெற்றோர்கள் அடக்கம் செய்ய வேண்டும்.

மாணவியின் தந்தை மற்றும் தாய் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி தெரிவித்ததை பற்றியும், அவர் இறப்பு குறித்து பெற்றோர் வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களின் வாக்குமூலத்தை நடுவர் சீலிடப்பட்ட கவரில் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த வழக்கு விசாரணையை வருகிற 24ம் தேதி மீண்டும் வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THNAJAI SCHOOL GIRL SUICIDE CASE ISSUE


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->