டெல்லிக்கு விரைந்த திவாகரன்.! தினகரனுக்கு குழி பறிக்க திட்டம்? கலக்கத்தில் அமமுக-வினர்.!!
thivagaran is now Delhi., ttv supporters panic
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சியானது பிரிந்தது., தனக்கென தனி கொள்கையை வைத்துக்கொண்டு நீங்கள் குற்றவாளி., இல்லை நீங்கள் தான் குற்றவாளி என்று மாறிமாறி பழி சுமத்தி டிடிவி தினகரன் ஆதரவாளர்களும்., இபிஸ்-ஓபிஸ் ஆதரவாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான தகவலானது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாதிராவிட கழகத்தின் தலைவரும்., சசிகலாவின் சகோதருமான திவாகரன் தற்போது திடீரென டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி டிடிவி தினகரன் உடனான மோதலை காரணமாக வைத்து அம்மா அணி என்ற பெயரில் புதிய கட்சியை அறிமுகம் செய்து., பின்னர் அம்மா அணியை அண்ணா திராவிடர் கழகமாக மாற்றி அறிவித்தார்.
அதற்கான கட்சி கொடியையும் அறிமுகம் செய்த திவாகரன்., மன்னார்குடியில் சசிகலாவின் படத்துடன் கூடிய அலுவலகத்தை திறந்தார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தனது பெயர் மற்றும் புகைப்படத்தை யாரும் பயன்படுத்த கூடாது என்றும்., தன்னுடன் பிறந்த சகோதரி என்றும் கூறக்கூடாது என்று தெரிவித்து திவாகரனுக்கு நோட்டீஸ் வழக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து திவாகரன் தனது அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் புகைப்படத்தை அப்புறப்படுத்தினர். இந்நிலையில்., சசிகலா மற்றும் தினகரை பகைத்துக்கொண்ட திவாகரனை பாரதிய ஜனதா கட்சியானது பயன்படுத்துவதாக கூறப்படும் நிலையில்., தினகரனின் ஆதரவாளர்களை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் மீண்டும் இணைக்கும் பணியானது அவரிடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
thivagaran is now Delhi., ttv supporters panic