கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கோவை மருத்துவமனையில் உயிரிழப்பு!
thiurupur ex.mla died for corona
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கே.தங்கவேல் காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல் 2011 - 2016 ஆம் ஆண்டு திருப்பூர் எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.
English Summary
thiurupur ex.mla died for corona