திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்குமா? ஸ்டாலின் வெளியிட்ட தகவலால் பரபரப்பு!!
Thiruvarur Byelection 2019 : MK Stalin Talk
தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் வருகிற 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.
அந்த அறிவிப்பின் படி, வருகிற வருகிற 10 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். பின் 11 ஆம் தேதி வேட்புமனு பரிசீலிக்கப்படும். வேட்புமனுவை திரும்ப பெற ஜனவரி 14 கடைசி தேதியாகும். இதைத்தொடர்ந்து, ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், ஜனவரி 31ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனிடையே, திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ விளக்கம் கேட்டு இருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Thiruvarur Byelection 2019 : MK Stalin Talk