மணல்கடத்திலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட முரளி., சடலமாக மீட்பு.! தி.மலையில் பரபரப்பு.!
thiruvannamalai man dead issue
திருவண்ணாமலை அருகே, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக முரளி என்ற நபரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள செய்யாற்று படுகையில், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக ஈடுபட்டதாக முரளி என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து போலீசார் கடந்த இரு தினங்களாக முரளியை தேடிவந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த முரளி தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, முரளியின் உறவினர்கள் போலீசார் துரத்தியதால் முரளி ஓடியதாக புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு பொம்பலூர் ஆற்றுப்படுகையில் போலீசாரால் துரத்தி செல்லப்பட்டதாக கூறப்படும், முரளி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனை அறிந்த முரளியின் உறவினர்கள், பெற்றோர் முரளியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
முரளியின் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே இவர் எப்படி இருந்தார் என்பது தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
thiruvannamalai man dead issue