சாதி மாறி காதல்., கல்லால் அடித்து., முகம் சிதைக்கப்பட்டு படுகொலை.! அதிர்ச்சியில் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


சாதி மாறி காதல் செய்த இளைஞர் ஒருவரை கல்லால் அடித்து முகத்தை சிதைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருகே மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததால், இளைஞர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே மேல ஆண்டவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த மாற்று சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் பத்துக்கும் மேற்பட்ட ஒரு கும்பல் பிரகாஷை நள்ளிரவில் துரத்தி வருவதாக பிரகாஷ் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிரகாஷின் நண்பர்கள் அவரை தேடி சென்று பார்த்தபோது பாறை குண்டு எனும் பகுதி அருகே கல்லால் அடித்து அவரின் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvannamalai love issue murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->