அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்.! எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முன்னாலேயே நடந்த சம்பவம்.!
THIRUTHANI ADMK ELELCTION MEETTING
திருத்தணி அருகே அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரம் பகுதியில் இன்று அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட உட்கட்சி தேர்தல் குறித்து, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற அந்த கூட்டத்தில், திருவள்ளூர் - திருத்தணி தொகுதி அதிமுக நிர்வாகிகள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உட்கட்சி தேர்தலுக்கான ரகசிய புத்தகம் வெளியே கொண்டு செல்லப்படுவதாக குற்றம்சாட்டி அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
THIRUTHANI ADMK ELELCTION MEETTING