அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்.! எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முன்னாலேயே நடந்த சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


திருத்தணி அருகே அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரம் பகுதியில் இன்று அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட உட்கட்சி தேர்தல் குறித்து, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற அந்த கூட்டத்தில், திருவள்ளூர் - திருத்தணி தொகுதி அதிமுக நிர்வாகிகள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உட்கட்சி தேர்தலுக்கான ரகசிய புத்தகம் வெளியே கொண்டு செல்லப்படுவதாக குற்றம்சாட்டி அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUTHANI ADMK ELELCTION MEETTING


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->