திமுக எம்.எல்.ஏ., மருத்துவமனையில் அனுமதி.!
THIRUPOOR SOUTH DMK MAL AFFECTED CORONA
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிதீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு மட்டும் 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து கொரோனா பரவளின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆளாகி வருகின்றனர்.
கடந்த வாரம் திமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியது. மேலும், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ செல்வராஜ்-க்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.
எம்.எல்.ஏ., செல்வராஜ் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இவருக்கு சளி மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
இதில், அவருக்கு லேசான கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இவர் கடந்த 2 நாட்களாக அரசு விழா மற்றும் கட்சி விழாக்களில் தன்னுடன் பணியாற்றியவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
THIRUPOOR SOUTH DMK MAL AFFECTED CORONA