தேர்தலுக்கு பிறகு மோடியை ஆதரிக்கும் திருமாவளவன்.. டெல்லி செல்வதற்கு முன்பு பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கொள்கையை முன்வைத்து மக்களவைக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 19-ம் தேதி டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

இந்நிலையில் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்பதற்கான டெல்லி செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த திருமாவளவன் மக்களவைக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது எந்த அளவில் சாத்தியமா தெரியவில்லை. 

அப்படி நடந்தால் நல்லதுதான். இது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப்பெரிய கால இடைவெளியில் தான் தேர்தல் நடந்து வருகிறது. அதனை எந்த அளவுக்கு சீர் செய்ய முடியும் என தெரியவில்லை என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan press meet in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->