பூக்கடையில் ரத்த வெள்ளம்.! மது வெறியர்களால் நடந்த கொடூரம்.!
thanjai man attack for drink
தஞ்சை : போத்திரிபாளையம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் வையாபுரி. இவரின் மகன் அய்யப்பன். இவருக்கு வயது 31. அய்யப்பன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு பூக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், அய்யப்பன் பணிபுரியும் அந்த பூக்கடையின் குடோன் அருகே சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் மணிகண்டன் (வயது 22) மற்றும் அவரின் நண்பர்கள் 4 பேர் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இதனை கண்டு ஆத்திரம் கொண்ட அய்யப்பன் உடனடியாக மணிகண்டன் மற்றும் அவனின் நண்பர்களிடம் இங்கு வைத்து மது அருந்தக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியுள்ளார்.
அப்போது, மணிகண்டன் வைத்து இருந்த பட்டா கத்தியால் அய்யப்பனை குத்தி உள்ளார். ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் கத்தி கூச்சலிட, அதே பூக்கடையில் வேலை பார்க்கும் ஆலம்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்த சீதாபதி மகன் ஆனந்த் (32) ஓடி வந்து காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அந்த மதுக்கு அடிமையான கூட்டம் அவரையும் கத்தியால் தாக்கியுள்ளது. இதனால் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்தும், அய்யப்பனும் சேர்ந்து மணிகண்டனை கம்பியால் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
அப்போது மணிகண்டனின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து காயமடைந்த 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
thanjai man attack for drink