#தமிழகம் || 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை., 12 வயது சிறுவனை கைகாட்டிய சிறுமி.! அதிர்ச்சி சம்பவம்.!
thanjai 12 years boy arrest for abuse case
தஞ்சையில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததாக கூறப்படும் விவகாரத்தில், 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நேற்று காலை 17 வயது சிறுமி ஒருவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த 17 வயது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த 17 வயது சிறுமி பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்றும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் அந்த 12 வயது சிறுவனை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவர்கள், அந்த சிறுவனுக்கு குழந்தை பெறும் அளவுக்கு தகுதி உள்ளதா? என்று கேள்வி எழுப்பி, அவன் அவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் அந்த சிறுமியின் உறவினர் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
thanjai 12 years boy arrest for abuse case