முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு போன் மேல் போன்.. என்ன நடந்தது? இதுதான் உண்மை! - Seithipunal
Seithipunal



கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் ஒன்றையும் பொதுக்குழு நிறைவேற்றியது.

இந்த பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லும் என்றுதீர்ப்பு வெளியானது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணை செய்த, உச்சநீதிமன்றம் தசரா பண்டிகை முடிந்த பிறகு விசாரணை செய்வதாக அறிவித்தது. மேலும், நீதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க வழக்கின் முடிவு வரும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதி அளித்தனர். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, "உச்ச நீதிமன்றத்தில் நாம்தான் பொதுச்செயலாளர் தேர்தலை தற்போது நடத்தவில்லை. வழக்கு முடிந்த பிறகு நடத்துகிறோம் என்று தெரிவித்தோம்.

ஆனால் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதைத்து விட்டதாக இங்கு தவறான செய்தியை பரப்பி கொண்டு இருக்கின்றனர். திமுகவின் தூண்டுதலின் பெயரில் பத்திரிகைகளும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை என்ற தவறான செய்தியை போட்டுள்ளார்கள்.

எனக்கு நிறைய பேர் போன் மூலம் அழைக்கு இந்த தவறான செய்திகளுக்கு விளக்கம் கேட்டு கொண்டு இருக்கின்றனர். நான் நிச்சயமாக சொல்லிக் கொள்வது இதுதான். நாம் சட்டரீதியாக வெற்றிபெற்று, பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்குவோம். இதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை" என்று தங்கமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangamani say about EPS ADMK Head Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->