அயோத்தியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்? அலெர்ட் செய்யப்பட்ட மாநிலம்.!
terrorist in ayoti security tight
அயோத்தியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் தாக்குதல் நடத்துமாறு சமூக வலைதளம் மூலமாக ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் தனது ஆதரவாளர்களுக்கு ரகசிய அழைப்பு விடுத்த வீடியோ மத்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்த தகவலை பாதுகாப்பு அமைப்புகளுடன் உளவுத்துறை பகிர்ந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.
அதேபோல் பாகிஸ்தானில் இருந்து 7 பயங்கரவாதிகள் நேபாள எல்லை வழியாக உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு ஊடுருவி அயோத்தியில் பதுங்கி இருக்க்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
English Summary
terrorist in ayoti security tight