தமிழக ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட எடப்பாடி.!
teachers day special
நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்கள், சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும் என்றும்,
சிறந்த மாணவ செல்வங்களை உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்க ஒன்றாகும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.