ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது! ஒட்டுமொத்த உண்மையையும் போட்டுடைத்த அமைச்சர்!!
Tamilnadu Minister CV Shanmugam Talking
தமிழக சட்டதுறை அமைச்சர் சி.வி சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் தான். சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்.
ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்யவேண்டாம் என சொன்னது யார்? என கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை யாரோ தடுத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilnadu Minister CV Shanmugam Talking