தமிழகத்தில் நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!
tamilnadu election officers list
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு பெரும் தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை மற்றும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்களுக்கு முகாம் நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியலை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதிவாரியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.
English Summary
tamilnadu election officers list