"திராணி இன்றி மிரண்டு விடுகிறீர்கள்" ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி .! - Seithipunal
Seithipunal


நேற்று பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கடும் சர்ச்சையானது இதைத்தொடர்ந்து அந்த பதிவு நீக்கப்பட்டது.

தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பெரியாரின் நினைவுநாள் குறித்த சர்ச்சை பதிவை நீக்கியிருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது கருத்தை டிவீட் செய்திருந்தார். அதில் 

"பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக.  
அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? 
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!
அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?" என ஸ்டாலின் அவரது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  உடனடியாக, மற்றொரு பதிவை இட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், 

பயம் பற்றி அந்தப் பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? 

இந்துக்கள் என்றாலே மிரண்டு விடுகிறீர்கள் போலும். அந்த பயம் இருக்கணும் ஸ்டாலின் என்று, சென்ற விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து பதிவு செய்யப்பட்டு அடுத்த சில மணி நிமிடங்களில்  நீக்கப்பட்ட அந்த டிவிட்டர் பக்கத்தையும் இணைத்து தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu bjp reply to mk stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->