"வெளியாகிய சுயரூபம்"திருமாவை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை!! - Seithipunal
Seithipunal


விசிக திருமாவளவன் கருத்து குறித்து, மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், "சகோதரர் திருமாவளவன் மனநிலையும், சுயரூபமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என கூறினார். ஆனால், ராகுலை பிரதமர் ஆக்குவதுதான் எனது முதல் வேலை என கூறுகிறார். 

ஆக இவர்களின் கொள்கை என்பது சுயநலம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக முன்னிலைப் படுத்திக் கொள்ளும் திருமா அவர்களுக்காக எதையும் செய்யவில்லை. அந்த ஜாதியை தனது ஆதாயத்துக்காக வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்.

இப்போது இவரது கண்ணுக்கு காந்திகூட தீவிரவாதியாக தெரிகிறார். கோட்சேவை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், காந்தி ஒரு இந்து தீவிரவாதி என கூறும் அளவுக்கு திருமாவளவன் மோசமாக சென்று இருக்கிறார். காந்தி உண்மையான இந்து. அவர் வணங்கும் கடவுளை ஹேராம் என்று கூறியது தவறா?

அவரவர் மதங்களுக்கு அவரை உண்மையாக இருக்கவேண்டும் என்பதைத்தான் கூறியிருந்தார். ஆனால், அவரையும் திருமாவளவன் தீவிரவாதி ஆக்கிவிட்டார். மக்களின் மனதில் விஷத்தை பாய்ச்சுவது திருமாவளவன் செய்யும் செயல் அவர் ஒரு பிரிவினைவாதி என்பதை அடையாளப்படுத்தியிருக்கிறார். மக்கள் அவரது வலையில் சிக்க மாட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai says about thirumavalavan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->