மத்திய அமைச்சர் கூறிய வார்த்தையால்.,கண்ணீர் விட்ட தமிழிசை!!
tamilisai crying
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 351 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைகிறது .தமிழகத்தில் திமுக கூட்டணி 37 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு ட்வீட் செய்தார். அதில் "நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல.
ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் கட்சி அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியை கூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர்" என்று ட்வீட் செய்துள்ளார்.மேலும் தமிழக பாஜக தலைமையில் தலைவர் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.