ப.சிதம்பரத்தை டைமிங்கில் ரைமிங்கா கலாய்த்த தமிழிசை..!!
tamilisai about p chithambaram
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சிதம்பரம் தலைமறைவாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி. அனால் இன்றைய நிலையில் ரகசியமாக சிதம்பரம் என்பதே சரி என்று பழமொழியுடன் தமிழிசை கிண்டலாக கலாய்த்து இருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், சிதம்பரம் இன்று தேடப்படுகிறார் என்றல் எதற்காக அவர் செய்த ஊழல், அவர் செய்த குற்றத்திற்காகவே தேடப்பட்டு வருகிறார்.
பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் தலைமுறைக்கே தலைவராக இருந்தாலும்... தலைமறைவு வாழ்கை வாழ வேண்டியிருக்கும் என்பதை உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறது சிதம்பரத்தின் ஊழல் போக்கு.
சிதம்பரம் செய்யும் இந்த காரியம் இரண்டு வகையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒன்று பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் இப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க நேரிடும்.
இரண்டாவது சட்டம் தன் கடமையைச் செய்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். தனக்கு ஒரு சம்மன் வந்து இருக்கிறது என்றால் அதை ஏற்று விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். இப்படி தலைமறைவாக இருப்பதில் எந்தவிதத்திலும் சிறந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
tamilisai about p chithambaram