தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் ரத்து? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பலத்தின்படி திமுக அணிக்கு 3 இடங்களும் அதிமுக அணிக்கு 3 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பட்டது.

திமுக சார்பில், அந்த கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல, அதிமுக சார்பில் முஹம்மது ஜான் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மாநிலங்களவை தேர்தளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பாமக , அதிமுக மக்களவை தேர்தல் ஒப்பந்தத்தின்படி அதிமுகவின் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, பாமக சார்பில் முன்னாள் மத்திய சுகதரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்

இந்தநிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகியதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். காலியிடமும் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதால் 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைத் தேர்வாகிறார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இன்று மாலை சான்றிதழ் வழங்கப்படும.

காலியிடமும் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறாது , பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் முஹம்மது ஜான் மற்றும் சந்திரசேகர், திமுக சார்பில் அந்த கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட போட்டியின்றி எம்.பி-யாக தெரிந்தெடுக்கப்பட்டனர் இதனால் மாநிலங்களவை தேர்தல்தமிழகத்தில் ரத்தானது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu rajysaba election cancel


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->