கர்ப்பிணி பெண்ணை., கணவர் முன்னிலையில் சுட்டு கொலை செய்த தலிபான் தீவிரவாதிகள்.! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று அழைக்கப்படும் தாலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் நாட்டில் அத்துமீறி உள்ளே புகுந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.

தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருக்காது என்ற காரணத்தினால், நாட்டை விட்டு வெளியேற பாலைவனங்களில் நடந்து அகதிகளாக வேறு நாட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

தாலிபான்களின் பெண்ணடிமைத்தனம் என்பது மிகக் கொடூரமாக இருக்கும் என்பது கடந்த கால கட்டங்களில் தாலிபான் ஆட்சியின் போது ஆப்கானிஸ்தான் மக்கள் நன்கு உணர்ந்து இருந்த காரணத்தினால், தற்போது நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக தாலிபான்களின் இந்த ஆட்சியில் பெண்கள் தனியே நடந்து செல்லக் கூடாது. பெண்கள் வேலைக்கு செல்ல தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து, மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்குவார்கள்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் ரன்றே மாகாணத்தில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த பெண் காவலர் ஒருவரை தாலிபான்கள் சுட்டு படுகொலை செய்துள்ளதாக, செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆறு மாத கர்ப்பிணியான நிகாரா என்பவர் பெண் காவலர் பணியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இஸ்லாமிய சட்டத்தை மதிக்காமல் நடந்த காரணத்தினால் அவரை, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில், தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதை அந்த செய்தளர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

taliban kill pregnant lady


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->