17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் ஆனது செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி அமைத்தன.ஒன்றரை வருடங்கள் நீடித்த இந்த ஆட்சியானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் கவிழ்ந்தது. 

அதன்பிறகு தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும்  தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லும் எனவும், கர்நாடக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உத்தரவிட்டு உள்ளது. அதே சமயம் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்த உத்தரவு நீக்கப்பட்டு அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த தீர்ப்பானது அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிரானதாக தோன்றினாலும், தற்போது அவர்கள் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த தீர்ப்பானது பாஜகவிற்கு சாதகமாகவே கிடைத்துள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court verdict of karnataka MLA disqualification case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->