ப.சிதம்பரத்திற்கு மேலும் அதிர்ச்சி! அமலாக்கத்துறை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Supreme Court rejects an appeal of P Chidambaram anticipatory bail plea by Enforcement Directorate
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு, இன்று வரை சி.பி.ஐ. காவலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தது.
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ., அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்தது. முதல் முறையாக கடந்த 22ஆம் தேதி ஆஜரான பொழுது 26 ஆம் தேதி வரையும், பின்னர் 26 ஆம் தேதி ஆஜரான பொழுது 30 ஆம் தேதி வரையும், பின்னர் செப்டம்பர் 2 ஆம் தேதி வரையும், அதனையடுத்து செப்டம்பர் 3 ஆம் தேதி வரையும் சி.பி.ஐ. காவல் நீட்டிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் மேலும் நாங்கள் காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சி.பி.ஐ. காவல் நீட்டிப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். அவரை கைது செய்து திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என சி.பி.ஐ. வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. கவலை நீட்டித்து இருந்தது.
சிதம்பரம் தரப்பில் செப்டம்பர் 2 ஆம் தேதி வாதிடப்பட்ட போது, வீட்டுக்காவலில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிதம்பரத்திற்கு அடுத்த அதிர்ச்சியாக இதே ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை இன்று சிபிஐ வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் அவரை கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. தொடக்க நிலையிலே ஜாமின் அளித்தால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Supreme Court rejects an appeal of P Chidambaram anticipatory bail plea by Enforcement Directorate