கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Supreme Court new order in Karnataka speaker
கர்நாடகாவில் ஏற்கனவே இப்போவோ, அப்போவோ என்று ஒரு நெருக்கடியான சூழலில் தான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களையும் காங்கிரஸ் 79 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.
ஒரு இடத்தில் சுயேட்சையும், ஒரு இடங்களில் பகுஜன் சமாஜ்வாதி, KPJP கட்சியும் வெற்றி பெற்றிருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தற்போது ஆட்சி நடைபெற்று வருகின்றது.
கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனில் 113 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ, சுயேச்சை, KPJP மற்றும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் 119 இடங்களை காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் வைத்திருந்தது.
அவ்வப்போது அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கும் எம்எல்ஏக்கள், தொடர்ச்சியாக சமாதானம் செய்யப்பட்டு வந்த நிலையில், 13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.
எம்.எல்.ஏக்-கள் சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தின் நகலை ஆளுநரிடம் அளித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். சில நாட்கள் முன்பு ராஜினாமா செய்த 11 பேரும் தனிவிமானத்தில் மும்பைக்கு சென்று தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கர்நாடக சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை வரை தற்போதைய நிலையே தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Supreme Court new order in Karnataka speaker