நான் கூறியதை கேட்காத மோடி.. பாஜக எம்பி கொந்தளிப்பு.! கொரோனாவுக்கு இது தான் காரணம்.! - Seithipunal
Seithipunal


கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினம் நாலு லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஒஒவ்வொரு நாளும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். 

இத்தகைய சூழலில் பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கொரோனாவுக்கு எதிரான போரின் பொறுப்பை மத்திய அமைச்சர் நிதின்கட்காரியிடம் கொடுக்க வேண்டும். என்று தெரிவித்து இருந்தார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்காவிட்டால் குழந்தைகளை குறிவைத்து வருகின்ற மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள கூடும். அத்துடன் நோய்க்கு எதிரான போராட்டத்தில் உள்கட்டமைப்புகளில் நிதின் கட்காரிக்கு நிபுணத்துவம் இருப்பதை காரணம் காட்டி, வைரசுக்கு எதிரான போரின் பொறுப்பை அவரிடம் கொடுக்க வேண்டும்." என்று தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில், தற்போது மீண்டும் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், "பிரதமர் மோடி நான் கூறியதை கேட்டு இருந்தால் கொரோனா வைரஸ் மத்திய அரசின் கட்டமைப்பிற்குள் இருந்திருக்கக்கூடும். தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்து இருப்பது ஜனநாயக அரசுக்கு எதிரானது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramaniya samy Tweet about Modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->