"என்னாச்சு?" வெளிநாட்டில் இருக்கும் எடப்பாடிக்கு, ஸ்டாலினின் முக்கிய கேள்வி.!  - Seithipunal
Seithipunal


முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் பேசிய போது, "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு 220 நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்ய இருப்பதாக பேசியிருக்கின்றார். எந்த நிறுவனம் எந்த ஊரில் தொடங்கப்பட இருக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இது குறித்து சட்டமன்றத்திலும், அதன் பிறகும் தொடர்ந்து பேசி இருக்கின்றேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு முறை நடைபெற்ற பொழுதும் 5 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக அறிவித்திருக்கின்றனர். அவை, அனைத்தும் எங்கே சென்றது என இன்னும் தெரியவில்லை.

தற்போது, அமெரிக்கா சென்று 2780 கோடி ரூபாய்க்கு தமிழகத்தை அதற்கு முதலில் பெற்றிருப்பதாக சில செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. முதலீடுகள் வந்தால் நிச்சயம் மகிழ்ச்சி தான் அதனை பாராட்டுகின்றோம். 

முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் பட்சத்தில் திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு விழா நடத்துவதற்கு கூட நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் முதலீடுகள் வருமா? இதற்கு முன்பு நடைபெற்ற முதலீட்டு மாநாடுகள் அனைத்தும் என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin speech about edappadi london


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->