தமிழக முதலமைச்சர் பேசியது தொடர்பாக.! திமுக தலைவர் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


நீட் மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெற முடியாமல் தமிழக அரசின் பிழைகளை மறைக்க, தி.மு.க., மீது பழி போடுவதை, அதிமுக அரசு உடனே நிறுத்த வேண்டும் என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் நுழைவு தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக தான். பழியை,எங்கள் மீது போடுகின்றனர் என தமிழக முதல்வர் பொய் கூறுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும்  இந்த தேர்வை முதன் முதலில் எதிர்த்தது கருணாநிதி தான். மத்தியில்  ஐ.மு., கூட்டணியில் இருந்தாலும்  உடனே மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்திற்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நீட் தேர்வுக்கு தடையும் பெற்றது திமுக என்றும். மேலும் திமுக  ஆட்சியில் இருந்தவரை, நீட் தேர்வு, தமிழகத்திற்குள் வரவே இல்லை  ஐ.மு., கூட்டணி அரசு இருந்தபோது நீட் தேர்வை ரத்து செய்து, உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. அதிமுக  பா.ஜ., ஆட்சியில் தான், நீட் தேர்வு, தமிழகத்திற்கு வந்தது என கூறியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin says about tn cm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->