50 நாட்கள் கடந்து விட்டது... மூலபத்திரம் எங்கே..? சர்வதேச அளவிற்கு கொண்டு சென்ற பாஜக..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், சென்னையில் இருக்கும் திமுக முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டு இருக்கிறது என்று பா.ம.க., நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் தெரிவித்திருந்தார். மேலும், இதை தொடர்ந்து முரசொலி அலுவலகத்தின் மூலபத்திரம் எங்கே என்று பல்வேறு பக்கங்களில் இருந்து கேள்வி எழுந்தது. இதையடுத்து, பா.ஜ.,வும், அந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கி கொண்டு வருகிறது. இன்னொரு, தி.மு.க.,வும், பதிலடி கொடுத்து வருகிறது. வழக்கு, நோட்டீஸ் என, விவகாரம் அவ்வப்போது கிளம்பி வருகிறது. 

Image result for stalin seithipunal

மேலும்,  இந்த விவகாரம் தொடங்கி நேற்றோடு 50 நாட்களை கடந்து விட்டது. இந்த நிலையில், பா.ஜ.க,வைச் சேர்ந்த மதுரை இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் சங்கர்பாண்டி, ஜெர்மனிக்கு போய் போராட்டம் நடத்தியிருக்கார். சர்வதேச பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துகிற இடமான, ஜெர்மனியின், கோலன் நகரில் முரசொலி மூலப்பத்திரம் எங்கே என்று பதாகையுடன், தனிநபராக போராட்டம் நடத்திவிட்டு வந்து இருக்கிறார். முரசொலி விவகாரத்தை, சர்வதேச பிரச்னையாக்கி விட்டார்கள். ஆனால் கடைசி வரைக்கும் அந்த மூலபத்திரம் எங்கே..? என்ற கேள்விக்கான பதில் தெளிவாக வந்த மாதிரி தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin panjami nilam bjp protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->