பிராமணர் பிடியில் சிக்கி திமுக.. மு.க. ஸ்டாலினின் மஜாவான திட்டம்.! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக பிரம்மாண்ட பிரமாண்டமாக வெற்றி பெற்றது. ஆனால் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அந்த வெற்றி தலைகீழாக மாறியது. 

பாராளுமன்ற தேர்தலில் திமுக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. ஆனால் இடைத்தேர்தலில் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் செல்லுபடியாகவில்லை. மிகப்பெரிய தோல்வியை திமுக சந்தித்தது. இதனால் பீகார் மாநிலத்தை சார்ந்த பிராமணரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் உதவியை நாடியுள்ளனர். 

ஸ்டாலினை தமிழக ஆட்சி கட்டிலில் உட்கார வைக்க பல நூறு கோடிகள் ஒப்பந்தம் முடிந்த பிறகுதான் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு வழி வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். 

தற்போது பாஜகவின் பாணியை மு க ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். பிரசாந்த் கிஷோர் என்றால் அரசியல் வியாபார தந்திரம். தற்போது இணைய உலகம் கையில் இருப்பதாக சமூகவலைதளங்களில் மூலம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் செய்யும் வேலைகளை சமூக வலைதளம் மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கின்றனர். 

இது ஒருபக்கம் இருக்க, அண்ணா வளர்த்த இயக்கம் இதுதான் என உடன்பிறப்புகள் கொந்தளிப்பில் உள்ளனர். பிராமணரின் கையில் திமுக இருப்பது உடன்பிறப்புகளுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin new plan dmk members shock


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->