வைகோ அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு., ஸ்டாலின் திடீர் வருகை!! - Seithipunal
Seithipunal


மருத்துவ பரிசோதனைக்காக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அப்போது அவரது உடல் நிலை தற்போது சரியில்லாததால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், 20,21,22 ஆகிய நாள்களில், வைகோ அவர்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் எனவும், இதனால் தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுகின்றது. என மதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வைகோ உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் சோர்வாக இருப்பதால், டாக்டர்கள் ஆலோசனை நான்கு நாட்கள் அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.

போரூர் ராமச்சந்திரா அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். அப்போது மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin meet with vaiko


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->