திமுகவினருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்.!   - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுக்களை பெறலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில், வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக விருப்ப மனு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் நவம்பர் 14ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தி.மு.க மாவட்ட தலைமையிடங்களில் உள்ள தலைமை அலுவலங்களில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும். விருப்பம்முள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin announcement for dmk members


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->