அதிமுகவின் முக்கிய புள்ளிக்கு வழங்கப்பட்ட பதவி.. நன்றி தெரிவித்து ட்வீட்.!!
sp velumani thanks to ops and eps
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைமை கழகத்தில் 14 ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டனர்.
இதன்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி வேலுமணி, துணை கொறடாவாக க. ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக கே.பி அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவின் சட்டமன்ற கட்சி கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பி வேலுமணி அதிமுகவிற்கு நன்றி தெரிவித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில், சட்டமன்ற கட்சி கொறடாவாக என்னை தேர்வுசெய்த கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணன் ஓ பன்னீர்செல்வம், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! என பதிவிட்டுள்ளார்.
English Summary
sp velumani thanks to ops and eps