டெல்லியிலிருந்து தமிழகத்திற்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள்! திடீர் ஆய்வு!
டெல்லியிலிருந்து தமிழகத்திற்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள்! திடீர் ஆய்வு!
வரும் 16-ம் தேதி அண்ணா அறிவாலய வளாகத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா, திமுக பொது செயலாளர் க.அன்பழகன் முன்னிலையிலும், முக ஸ்டாலின் தலைமையிலும் நடக்கவுள்ளது. கருணாநிதி, அண்ணா சிலை-களை தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்.
இந்த விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விழா முடிந்த உடன் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களும், தோழமை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி வரவுள்ளதை ஒட்டி டெல்லியிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வருகை தந்துள்ளனர். அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் மற்றும் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
English Summary
sonia gandhi december 16 coming in tamil nadu