அதிமுக அமைச்சரை உயிரோடு கொலை செய்த சம்பவம்.! வெளியான பரபரப்பு செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி மூச்சு திணறலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இரு தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து உள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அவரின் நுரையீரல் 90 சதவிகிதம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையை 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்றும் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அதிமுக பிரமுகர் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டு அதிமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த சரவணன்  என்பவர் தனது முகநூல் பக்கத்தில் அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டு இருப்பதை பார்த்து பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

பின்னர் அதனை அவர் நீக்கிவிட்டார். இதுகுறித்து சரவணன் தெரிவிக்கையில், தவறுதலாக தெரியாமல் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டுவிட்டேன், பின் அதனை நீக்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SOME FAKE NEWS ABOUT MINISTER DURAIKANNU


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->