வசமாக சிக்கிய திமுக எம்பி செந்தில்குமார்., வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
social media against dmk mp senthikumar
சாதிக்கு எதிரானவன் நான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திமுக எம்பி செந்தில்குமார், தனது தாத்தா பெயரை கூறும் போது சாதி பட்டத்துடன் சொல்லி தனது சாதிய வெறியை அம்பலப்படுத்தி கொண்டார்.
அதேபோல், பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, திமுக எம்பி செந்தில்குமார் நிருபர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சிக்கித் தவித்தார்.
அதிலும், குறிப்பாக நானும் ஒரு வன்னியர்., நானும் ஒரு வன்னியர் தான்., என்று அவர் சொல்லி வாக்கு சேகரித்து இதுகுறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு., பதில் கூற முடியாமல் தவித்து போனார்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறிய, "படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை" என்ற கருத்துக்கு திமுக எம்பி., செந்தில் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் செந்தில்குமார். நான் திமுகவின் ஒரு எம்பியாக இருக்கிறேன். நான் திருமாவளவனை நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள்.,
"நீங்கள் ஏன் வாக்கு சேகரிக்கும் போது திருமாவளவனை நம்பி அழைத்து செல்லவில்லை?
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களின் மகளை அழைத்துக் கொண்டு வாக்கு சேகரித்து அதற்கான காரணம் என்ன?
திருமாவளவன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவரை அழைத்துக்கொண்டு அல்லவா நீங்கள் வாக்கு சேகரிக்க சென்று இருக்க வேண்டும்." என்று தொடர்ந்து கேள்விக் கணைகளால் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.
திமுக எம்பி செந்தில்குமார் மட்டுமல்ல., திமுகவில் உள்ள பலரும் தாங்கள் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறிவிட்டு., கொல்லைப்புறத்தில் சாதி அரசியல் செய்வதை தொடர்ந்து வழக்கமாக இருந்து வருகின்றனர்.
இது சமீபகாலமாக அம்பலமாகி வருகிறது. இந்தப் பொய் நாடகம் எதற்கு இவர்களுக்கெல்லாம்., தான் தன் சுய அடையாளத்தோடு இருந்து விட்டுப் போவது தான் நல்ல அரசியல் தலைவர்களுக்கு நல்லது. என்று என்றும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
social media against dmk mp senthikumar