தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆப்பு.! சித்தார்தை கைது செய்வது குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டி.! - Seithipunal
Seithipunal



பஞ்சாப் மாநில பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து, தேசிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில், "அராஜகவாதிகளின் சம்பந்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது" என்று தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

வீராங்கனை சாய்னா நேவால் பதிவை ரீடுவிட் செய்த நடிகன் சித்தார்த், ஆபாசமான வார்த்தையை குறிக்கும் விதமாகவும், இரட்டை அர்த்தத்தில் பொருள்படும்படி தேசிய வீராங்கனை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். 

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்த நிலையில், நடிகன் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, மகாராஷ்டிர, ஹைதராபாத், சென்னை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்தது. 

இதில், நடிகன் சித்தார்த் மீது ஹைதராபாத் சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சித்தார்த் மீது, section 67 of IT Act, Section 509 of IPC கீழ்., ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகன் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நடிகர் சித்தார்த்தை கைது செய்வது அல்லது அவர் மீது வழக்கு பதிய நம்மால் முடியாது. ஏனென்றால் ஏற்கனவே ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதனால் நம்மால் வழக்கு பதிவு போட செய்ய முடியாது. நாங்கள் அவரது வாக்குமூலத்தை பெறுவதற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அவர் நேரில் ஆஜராக வேண்டும். அவர் ஆஜராகவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddharth SankarJiwal SainaNehwal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->